தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது. நடிகர் விஜயிடமும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடனும் பேச்சு வார்த்தை கூட நடந்தது.

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.
படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தயாரிப்பு நிறுவனமான மதராஸ் டக்கிஸ் நிறுவனம் படத்தின் சிறிய க்லீம்போஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வாரம் அடுத்த அப்டேட் வரும் என பதிவிட்டுள்ளார்கள். இது படத்தின் டீசரை வெளியிட படக்குழு எடுத்துள்ள திட்டம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த கிலிம்ப்ஸ் வீடியோ நீங்கலும் காண….
Video Courtesy- Connecting People tamil