தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ரட்சிதா. பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் பல தொடர்களில் நடித்த போதும் இவரால் பெரிய அளவில் பிரபலம் ஆக முடியவில்லை. பின்பு சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இன்றளவும் அந்த தொடர் பேசப்படுவதற்கு ரட்சிதாவின் நடிப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருப்பார். சமீபத்தில் கூட நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அந்த தொடரிலிருந்து விலகினார்.

அதற்கான காரணத்தை சொல்லும் போது இந்த சீரியலில் கதாநாயகியே தேவையில்லை, எதற்கு என்னை கதாநாயகியாக வைத்துள்ளனர் என்று எனக்கெ தெரியவில்லை என்று கூறிவிட்டு நாடகத்திலிருந்து விலகினார் ரட்சிதா. பின்னர் ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார். இவரின் கணவர் தினேஷ். இவரும் ஒரு சின்னத்திரை கலைஞர் ஆவார். இருவரும் இணைந்து சில நாடகங்கள் நடித்துள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார். இதனால் ரட்சிதாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். Youtube video Code Embed Credits: TamilCrowd
கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் பேசாமல் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. ரட்சிதா, தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 2013ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. 9 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்கள் தற்போது திருமண உறவை முறித்துள்ளனர். ரட்சிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் தினேஷுக்கு வாய்ப்புகள் வராத காரணத்தால் மனஸ்தாபம் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆகி 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாததும் பிரிவுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது. செய்தியை நீங்களும் காண..Watch the below video..