விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2வில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. விஜய் டிவியின் முக்கியமான சீரியலில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. இது போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்கிற ஹீரோயின் கனவை இனிப்பு கடை நடத்தி வரும் ஹீரோ எப்படி நிறைவேற்றுகிறார் என்பது குறித்த கதைதான் இது. ஹிந்தி கதையை கழுவி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான “என் கணவன் என் தோழன்” என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் ஹீரோயின் சந்தியாவிற்கு அவரது மாமியாரே முட்டுக்கட்டையாக இருக்கிறார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி ஹீரோ சரவணன் தனது மனைவியை எப்படி ஐபிஎஸ் அதிகாரியாக மாற்றுகிறார் என்பது குறித்த கதை தான் ராஜா ராணி சீசன் 2.

இந்தக் கதையில் ஆரம்பத்தில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த கதையிலிருந்து விலகி விட்டார். அவர் விலகிய போது இந்த நாடகத்தின் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று அடிவாங்கியது. பதற்போது ரியா விஸ்வநாதன் என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட தற்போது இவரை சந்தியாவாக ஏற்றுக் கொண்டுள்ளனர் .பல தடைகளை கடந்து சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்க்காக சென்னைக்கு சென்று இருக்கிறார். அங்கும் அவருக்கு பல தடைகள் ஏற்படுகிறது. ஒவ்வொன்றாக சமாளித்து வந்து கொண்டிருக்கும் வேளையில் அதிரடி திருப்பமாக அவர் கர்ப்பமாக இருப்பதாக காட்டப்பட்டது.
இந்த விஷயத்தை அவர் வீட்டில் உள்ளவர்களிடம் ஃபோன் செய்து சொன்னபோது அவர்கள் ட்ரைனிங் வேண்டாம் என்று வீட்டிற்கு வந்து விடுமாறு கூறுகின்றனர். சந்தியாவும் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலையில் ட்ரைனிங் தொடர முடியாது என்று சொல்லி அவர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். அவரை அழைத்து செல்வதற்காக சரவணன் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் வந்திருக்கின்றனர். அவரும் வீட்டிற்கு செல்ல காரில் ஏறும் பொழுது அவரது நண்பர் ஒருவர் ஓடி வந்து ஒரு விஷயத்தை கூறுகிறார். சந்தியாவின் நண்பர் சொன்னது என்ன? சந்தியா வீட்டிற்கு செல்வாரா? அல்லது ஐபிஎஸ் ட்ரைனிங் தொடர்வாரா? என்பது தெரியவில்லை. அந்த பரபரப்பான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television