நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதை தொடர்ந்து இவர் நடித்த டாப்பு டக்கர் பாடலும் சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பியது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரஷ்மிக தற்போது சமீபத்தில் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படமே சுல்தான். சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் ரஷ்மிக்கா. இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இன்னும் பல தமிழ் படங்களில் ராஷ்மிகா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை தான்.
அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிட்டுருவருகிறார். இந்நிலையில் தற்போது புதிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. முக்கியமாக தான் முதல் முதலில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் திரைப்படமான கிள்ளி திரைப்படம் என்று பதிவிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.