தைப்பூச திருநாளில் கோவிலிலுக்குச் சென்று அந்த புகைப்படங்களை தங்களது instagram பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றனர் ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகள். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் முன்னணி நடிகைகளின் திருமணத்திற்கு இணையாக இந்த திருமணம் பேசப்பட்டது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கின்றனர். தொகுப்பாளியாக வாழ்க்கை பயணத்தை தொடங்கிய மகாலட்சுமி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். தனது முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்தர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. திருமணமாகி விவாகரத்தாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் செப்டம்பர் மாதம் திருப்பதியில் கோவிலில் வைத்து ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாகப் பரவியது. நடிகர்கள் திரை பிரபலங்கள் என யாரையும் அழைக்காமல் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் ரவீந்தர். இந்த திருமணத்திற்கு பின்னர் ரவீந்தர் உருவக்கேலி செய்யப்பட்டார். ஆனால் பலரும் ரவீந்தருக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர்கள் டின்னர் செல்வது, கோயில்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என்று புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்கள் வீட்டில் நடக்கும் தாலி பிரிப்பு வைபவம், பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் மகாலட்சுமி தீவிரமாக சீரியல்களில் நடித்து வருகிறார். படு பிஸியாக இருக்கும் இவர்கள் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் கோவில்களுக்கு சென்று அதை புகைப்படமாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல கோவில் ஒன்றிற்கு சென்ற அவர்கள் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். தைப்பூசம் – நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டுமில்லை, எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டிக் கொண்டோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ஹார்ட் ஸ்மைலி போட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மகாலட்சுமி. அந்த தம்பதியினருக்கு விரைவில் முருகன் போன்ற குழந்தை பிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்டில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.