ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டவுள்ள அறிக்கையில் உலகின் பொருளாதார நாடுகளில் அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக முதல் இடத்தில் இந்தியா நிற்கிறது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி, வாராக் கடன் NPA குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
RBI கணக்குப் படி கடந்த நிதி ஆண்டில் இந்திய வங்கிகளின் Gross NPA 11.2 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் இந்த ஆண்டு இது 9.1 சதவிகிதமாக குறைந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக வாராக் கடன்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது. தற்போது வாரா கடன்களைக் கிட்டத் தட்ட கண்டு பிடித்து முடித்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறது RBI. புதிய வாராக் கடன்கள் வருவது குறைந்து உள்ளதால். தற்போதைய மொத்த வாரா கடன்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.