சினிமாவை பொறுத்த வரையில் உழைக்கும் வரை மட்டுமே மக்கள் கலைஞர்களை ஞாபகம் வைத்து கொள்வார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரவையிலேயே. ஒரு கட்டத்திற்கு பின் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இழந்து தான் ஆக வேண்டும். இது சினிமா உலக நியதி. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை மிஞ்சி யாரும் வர முடியாது என கூறப்பட்ட போது, ரஜினியும், கமலும் அவரை தாண்டி ஒரு இடத்தை பிடித்தனர். அதே போல ரஜினி, கமலிற்கும் கூற இப்பொது விஜயும், அஜித்தும் அவர்களை தாண்டி சாதித்து கொண்டிருக்கிறார்கள். இது மாறிக்கொண்டே இருப்பது தான். சினிமாவில் யாரும் நிரந்திரமாக இருக்கப்போவது இல்லை.
அது நடிகர்களுக்கு 20 முதல் 40 ஆண்டு காலங்கள் என்றால், நடிகைகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே. 80,90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரேவதி. அன்றைய காலகட்டத்தில் இவரை மிஞ்ச ஆள் என்ற அளவிற்கு மிக ஏப்ரியா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியிலும் இவர் மிக முக்கிய நடிகையாக இருந்தார்.

தமிழில் 1983ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் “மண் வாசனை” படத்தின் மூலம் நடிகர் பாண்டியனுடன் அறிமுகமானார். முதல் படமே வெற்றி என்பதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர துவங்கின. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பிரபு என அன்றைய பல பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்துள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றிருந்தார் ரேவதி.
அது மட்டுமின்றி இவர், 2001ஆம் ஆண்டு வெளியான “மித்ரு” என்று அப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றார். “Red Building Where the Sun Sets” என்ற படத்திற்கு சிறந்த படம்(Non-mainstream) என்ற வகையில் தேசிய விருதையும் பெற்றார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரா மேனனை 1989 ஆம் ஆண்டு ரேவதி திருமணம் செய்துகொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இத்தம்பதியினர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தினாலும் பல கருத்து வேறுபாடுகள் நிலவிய காரணத்தினாலும், 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ரேவதி தனது ஐம்பதாவது வயதில் டெஸ்ட் டியூப் மூலமாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
தற்போது ஒன்பது வயதான மஹீ என்ற தன் குழந்தையோடு வாழ்ந்துவரும் ரேவதிக்கு ஆதரவு யாருமில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரேவதி இல்லாத திரைப்படத்தை பார்க்க முடியாத அளவுக்கு பிரபலம் அடைந்தவர்.
அந்த அளவு இவருக்கு ரசிகர்களும் ஆதரவாளர்களும் இருந்த நிலையில், தற்போது வயது முதிர்ந்து வருவதையடுத்து, தன் குழந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்ள ஆதரவு யாரும் இல்லை என்று வேதனையுடன் ரேவதி தெரிவித்து வருவது திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Video Courtesy – IndiaGlitz