நடிகர் ஆர்.ஜே பாலாஜி தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனது அடுத்த இரண்டு படத்திற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆர்.ஜேவாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து இன்று வளர்ந்து வரும் நடிகராக உயர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

ஆரம்பத்தில் பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, இது என்ன மாயம், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார்.
பின்னர் 2019ம் ஆண்டு வெளியான ‘எல்கேஜி’ என்கிற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்பு ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரன் பேபி ரன்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன. எனவே சமீபத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ வெற்றி விழாவை நடத்தி இருந்தார் ஆர் ஜே பாலாஜி. அதில் பேசிய அவர் விரைவில் ‘எல்கேஜி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதற்கான ஐடியா தன்னிடம் இருப்பதாகவும் பேசினார்.
அதேபோல ஆர் ஜே பாலாஜி முதல் முறையாக இயக்குனராக களம் இறங்கிய நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த இரண்டு திரைப்படங்களையும் மீண்டும் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.