Categories: வைரல்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..தூக்கிவீசப்பட்ட பயணிகள்..பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்

வெளியிட்டது

நாம் அனைவரும் எங்கேயும் எப்போதும் படம் பார்த்து இருப்போம். அந்த படத்தின் முடிவு பலரின் மனதையும் பாதிப்புள்ளாகி இருக்கும். இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பல உயிர்கள் பலியாகி இருக்கும். அந்த படத்தைப் பார்த்த பின்னர் பலருக்கும் பேருந்தில் செல்லவே பயந்த நிகழ்வுகளும் உண்டு. இது போல இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் விபத்துக்கள் நடந்து கொண்டேதான் உள்ளது. அந்த திரைப்படத்தை போலவே சேலம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனதை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..தூக்கிவீசப்பட்ட பயணிகள்..பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள் 1

 

சேலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி கொண்ட CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கோழிப்பண்ணை அருகே எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

இந்த பயங்கர விபத்தில் பல பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். தனியார் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இன்ஜின் இருக்கும் இடத்திற்கு பறந்தார். 40 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கல்லூரி மாணவி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். மழை பெய்து கொண்டிருந்ததால் சாலை சரியாக தெரியவில்லை. மேலும் கல்லூரி வாகனம் தவறான பாதையில், ஏறி வந்ததா என்பது குறித்தும் சங்ககிரி பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சிகளை நீங்களும் பார்க்க.. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்