
கடந்த ஆண்டு விவாகரத்தான முதலே நடிகை சமந்தா தான் திருமண வாழ்க்கை குறித்த கேள்விகள் போது வெளியில் ஏற்கொள்வதை தவிர்த்து வருகிறார். 2017ஆம் ஆண்டு காதல் கணவர் நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 2021 ஆண்டு இறுதியில் தாங்கள் இருவரும் பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். தெலுங்கு திரை ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரை ரசிகர்களுக்கும் இது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் அவருடைய முடிவை மதித்து அதனை அனைவருக்கு ஏற்று கொண்டனர்.
தமிழில் மொஸ்கோவின் காவேரி படத்தில் அறிமுகமான சமந்தா, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பு “ஏ மாயம் சேசாவே ” படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நாயகியாக முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் அறிமுகமானார். பின்னர் இயக்குனர் ராஜமௌலியின் “நான் ஈ” படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்நது தமிழ், தெலுங்கு என இருமொழியிலுள்ள முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடிகர் விஜயுடன் நடித்த படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட். கத்தி, தெறி, மெர்சல் என 3 படங்களில் விஜயுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ்ஸில் வசூல் மழை எடுத்துள்ள படங்கள். திருமணமான பின்பும், சில படங்களில் நடித்து வந்த சமந்தா, சில மாதங்கள் நடிக்காமல் இருந்தார். அப்போதே இருவரும் பிரிந்தார்கள். பின்னர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு ஹிந்தியில் “தி பேமிலி மேன் 2” வெப் தொடர் மூலம் பதிலடி கொடுத்து சிறந்த நாயகியாக பெயரெடுத்தவர்.
அண்மையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் தான் பக்கம் திருப்பினார். படத்தை விட அந்த பாடலே பெரிய வெற்றியை பெற்றது. பின் தமிழில் நயன்தாரா, விஐய் சேதுபதியுடன் “காதுவாக்குல ரெண்டு காதல்” படம் நடித்த சமந்தா இப்பொது “சகுந்தலம்” என்ற படம் நடித்து முடித்துள்ளார். இது வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சில தினங்களாக நடிகர் சைதன்யாவும் நடிகை சோபித்தாவும் காதலிப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அது உண்மையா பொய்யா என தெரியாத நிலையில் இந்த செய்தி மிகவும் வைரலானது. அதற்கு பின்னல் இருந்து நடிகை சமந்தா வேலை செய்கிறார் என்றும் வதந்திகள் பல பரவின. இப்போது அது போன்ற ஒரு செய்தியை பார்த்துள்ள சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கட்டமாக பதில் கொடுத்துளளார்.
பெண்ணிற்கு நடந்தால் உண்மை, ஆணுக்கு நடந்தால் புரளியா…என்ன நியாயம் இது, போய் உங்களுடைய வேலையை பாருங்கள், குடும்பத்தை கவனியுங்கள் என கூறி பதிவிட்டுள்ளார். அந்த போஸ்ட் இப்பொது வைரலாகி வருகிறது.