கன்னட சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமாகி இப்பொது நல்ல அறிமுகத்தை பெற்றுள்ள நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னடத்தில் வெளியான “கிராக் பார்ட்டி” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் அதன் ரீமேக்கான தெலுங்கு “கிராக் பார்ட்டி”யிலும் நடித்துள்ளார். தொடர்ந்து கன்னட, தெலுங்கு சினிமாவில் படங்கள் நடித்துள்ள இவர், தமிழில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு, ஷா ரா ஆகியோர் நடிப்பில் வெளியான “கோமாளி” படத்தின் மூலம் அறிமுகமானார்.

படம் நல்ல வெற்றியை அடைந்ததை தொடர்ந்து, பின் தமிழில் பப்பி, வெங்கட் பிரபுவின் “மன்மத லீலை” போன்ற படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” கன்னட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதே போன்று ஹிந்தியில் ஒளிபரப்பான “ரௌடிஸ்” போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது நடித்து வரும் “க்ரீம்’ படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார். திடீரென சண்டை காட்சியின் ஷூட்டிங்கின் போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த ஏதிர்பாராத விபத்து குறித்து படத்தின் இயக்குனர் அபிஷேக் பசந்திடம் பேசிய போது, “இது ஒரு சண்டைக் காட்சியின் போது நடந்தது” என்று கூறினார். ஸ்டண்ட் செய்ய ஒரு பாடி டபுளைப் பயன்படுத்த குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது, ஆனால் அதனை வேண்டாம் என கூறி தானே செய்த சம்யுக்தா, “அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்படுத்துள்ளது.
எழுத்தாளர் அக்னி ஸ்ரீதர் எழுதிய சோஷியல் த்ரில்லர் படமான க்ரீம் படத்திற்காக அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்துடன் சம்யுக்தா கைகோர்த்தார். படத்தில் தனது பாத்திரம் பற்றி நடிகை முன்பு கூறியது, “இந்த கதையில் நான் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. நீங்கள் என்னுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளாத பாத்திரம், நான் என்ன நடிக்கிறேன் என்று சொன்னால், முழு கதையையும் வெளியிடுவேன், ஆனால் நான் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது என்னவென்றால், நான் என் வயதில் நடிக்கிறேன், அவள் மிகவும் கொடூரமானவள். நிலவும் சூழ்நிலைகளும் வாழ்க்கையும் அவளுக்குத்தான் நடக்கும். அவள் உயிர் பிழைத்தவள் என்பதுதான் அவளுடைய வாழ்க்கையின் அழகு. மேலும் சிறந்த விஷயம் என்னவென்றால், கதை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மாசற்ற எழுத்துக்கு பெயர் பெற்ற அக்னி ஸ்ரீதர் சாரால் எழுதப்பட்டது.”