விஜய் டிவி பிரியங்கா மீது மணிமேகலை பரபரப்பான புகார் ஒன்றை வைத்து உள்ளார். மேலும் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் எனவும், பிரியங்கா தன்னை நிகழ்ச்சி நடத்தவிடுவதில்லை என கூறி இருந்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி மணிமேகலை போட்ட பதிவில் கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கொள்வார் என மணிமேகலை கூறியிருந்தார். அந்த பதிவியில் சர்ச்சைக்கு பெயர் போன சீரியல் நடிகை எந்த கடவுள் என கூறியிருந்தார். அதாவது மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்டு இந்த பதிவை பதிவிட்டு உள்ளார்.
இதனை பார்த்த மணிமேகலை ஆதரவாளர்கள், ஸ்ரீநிதியை வச்சி செய்து உள்ளனர். ஸ்ரீ நிதியை கடுமையாக போட்டு தாக்கி கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது அது எதற்கும் ஸ்ரீநிதி பதில் பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, ஸ்ரீநிதி ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசுவதாக கூறி வருகின்றனர்.