Categories: சினிமா

சிம்ரனின் 2 மகன்களை பாத்து இருக்கீங்களா? நல்லா வளந்துட்டாங்களே.! சிம்ரன் பகிர்ந்த புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகை சிம்ரன் தற்போது தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப் படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோளுக்கு மேல் வளர்ந்து இரு மகன்களும் தோழனாகி நிற்கும் அந்த புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் 2000 ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் சிம்ரன்.

சிம்ரனின் 2 மகன்களை பாத்து இருக்கீங்களா? நல்லா வளந்துட்டாங்களே.! சிம்ரன் பகிர்ந்த புகைப்படங்கள்.! 1

கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் என்று அன்றைய முன்னணி நடிகர்களாக இருந்த பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறார் சிம்ரன். அதே இளமையோடு இருக்கும் அவர் தற்போது தனது மகன்களின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சிம்ரன் தீபக் பாபா என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வதை சிம்ரன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு அவர் பதிவிட்டிருக்கிறார். கணவர் மற்றும் பிள்ளைகள் என அனைவருடனும் சந்தோஷமாக இருக்கும் சிம்ரனின் மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை ரசிகர்கள் வாரி இறைத்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை பார்த்த சிம்ரனின் ரசிகர்கள் மகன்களுக்கு எவ்வளவு வயதானாலும் இன்னும் சிம்ரனுக்கு வயதாகாமல் அப்படியே இருக்கிறீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இந்த செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. சிம்ரனின் கியூட் குடும்பத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் ரசிகர்கள் வாரி இறைத்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்