உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே விஜயா..! நிற்க வைத்து கிழித்தெடுத்த பாட்டி..! பதறிய விஜயா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை . இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. பல ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால் அதற்கு காரணம் இந்த தொடரில் நாயகன் மற்றும் நாயகியாக நடிப்பவர்கள் தான் காரணம் எனலாம். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே விஜயா..! நிற்க வைத்து கிழித்தெடுத்த பாட்டி..! பதறிய விஜயா..! 1

தற்போது இந்த தொடரில், மீனாவின் நகையை எடுத்துக்கொண்டு வித்துவிடுகிறார் மனோஜ். இதற்க்கு விஜயாவும் உடந்தையாக உள்ளார். தற்போது முத்து அந்த நகைகளை திரும்பி கேட்கவே, விஜயா கவரிங் நகைகளை கொடுத்து, மீனா கொடுத்ததாக பழி போடுகிறார். இவர்களின் நாடகத்தை முத்து கண்டுபிடித்து விடுகிறார். மேலும் மனோஜுக்கு பதிலாக ரோகிணி 2 லட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் , அண்ணாமலையின் அம்மா வந்து விஜயாவை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். மேலும் அனைவரின் முன்னாடியும் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.இதனால் விஜயா செய்வதறியாது விழித்து கொண்டு உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. பாட்டிக்கு மட்டுமே விஜயா பயப்படுவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்