“இந்த முத்துதான் மனோஜுக்கு ஊத்தி கொடுத்தான்” பல்டி அடித்த பிரவுன் மணி.! வீட்டில் வெடித்த சண்டை.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜிற்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கும் பிரவுன் மணி வீட்டிற்கு வந்து முத்து தான் இந்த செயலை செய்தார் என்று பொய் கூறுகிறார். எனவே வீட்டில் உள்ள அனைவரும் முத்துவை திட்டுகின்றனர். ஆனால் முத்து உண்மைகளை வீட்டில் சொல்லாமல் மறைக்கிறார். மேலும் பிரவுன் மணியிடம் உண்மைகளை கூறுமாறு முத்து சண்டை போடுகிறார். இதனால் கடுப்பான ரோகினி முத்துவை பார்த்து, “உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இந்த முத்துதான் மனோஜுக்கு ஊத்தி கொடுத்தான்" பல்டி அடித்த பிரவுன் மணி.! வீட்டில் வெடித்த சண்டை.! 1
ரோகிணி தன்னுடைய மாமா என்று சொல்லி கறிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பிரவுன் மணியை செட்டப் செய்து அழைத்து வருகிறார். வீட்டிற்கு வரும் பிரவுன் மணி தொடர்ந்து ஆடு வெட்டுவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. அவரை தனியாக அழைத்துச் செல்லும் முத்து, அவர் குறித்த உண்மையை கண்டறிய முயற்சி செய்கிறார். அந்த சமயம் பிரவுன் மணி மனோஜ்க்கு சரக்கை வாயில் ஊற்றி விடுகிறார். இந்த விஷயம் தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. குறிப்பாக ரோகிணி முத்துவிடம் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.


வீட்டிற்கு வந்த பிரவுன் மணி, “நான் சொல்ல சொல்ல கேட்காமல் மனோஜ் இருக்கும் முத்துவும் அவரது நண்பர்களும் சேர்ந்து தான் மனோஜுக்வகு சரக்கை வாயில் ஊற்றி விட்டனர்” என்று பொய் கூறுகிறார். இதனால் ரோகிணியும் விஜயாவும் முத்துவை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கின்றனர் நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்