நடிகை சினேகா தனது தாய் தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். சமீபத்தில் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களுக்கு சென்று அங்கு அவர்களுக்கு உணவு, நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பாக கொண்டாடி இருந்தார் சினேகா. இந்த நிலையில் தனது பெற்றோருக்கு சஷ்டியப்தபூர்த்தி செய்து அழகு பார்த்துள்ளார் சினேகா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தற்போது நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். பிரசன்னா சினேகா தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். மிகப்பெரிய இடைவேளைக்குப் பின்பு சாபுத்திரி 2 என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு திருப்புகிறார் நடிகை சினேகா.

இந்த நிலையில் அவரது வீட்டில் நடக்கும் விசேஷங்களை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட வரலட்சுமி பூஜைக்காக பல முன்னணி நடிகைகளை வரவழைத்து அவர் பூஜை செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது. இந்த நிலையில் தற்போது தனது தந்தையின் 70 வது வயது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கும் அவரது மனைவிக்கும் சஷ்டியப்த பூர்த்தி திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார். பொதுவாகவே திருமணம் என்றாலே பலருக்கும் கொண்டாட்டம் தான். இந்த நிலையில் தனது தந்தையின் 70 வது பிறந்தநாளை அவரது மனைவியுடன் கொண்டாடுவது என்பது சிறப்பான ஒன்று. சமீபத்தில் தன்னுடைய தந்தையின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை சர்ப்ரைசாக ஆதரவற்ற குழந்தைகள் வாழும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களுக்கு உணவு உடை நோட்டு புத்தகம் ஆகிவற்றை வழங்கி இருந்தார் சினேகா.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் சஸ்டிப்த பூர்த்தி திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து இன்று அவரது தந்தை ராஜாராம் மற்றும் அவரது தாய் பத்மாவதிக்கும் மகன்கள், மகள்கள் என அனைவரும் ஒன்று கூடி இந்த விழாவை நடத்தி முடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.