மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனும், சோனியா அகர்வாலும் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து புதிய தொடக்கம் என சரண் பதிவிட்டு இருந்தது நெட்டிசன்கள் மத்தியில் பல யூகங்கள் கிளப்பி இருந்தது. பிரபல பிண்ணனி பாடகரான மறைந்த எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பி சரண், இவரும் பிண்ணனி பாடகராக உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார்.

சோனியா அகர்வாலை பொறுத்தவரை செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலில் காதல் கொண்டேன் படத்தில் ஜோடியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். பின்னர் 7ஜி ரெயின்போ காலணி, கோவில் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதற்கிடையில் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். பிறகு சிறிதுகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எஸ்பிபி சரணுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதை பகிர்ந்த சரண் புதியது ஒன்று உருவாகிக் கொண்டுள்ளது என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கிளப்பியிருந்தனர். நிறைய பேர் கமெண்ட்டில் வாழ்த்தும் தெரிவிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மையில் சரண், சோனியா அகர்வார், குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இணைந்து ஒரு வெப் சீரிசில் நடிக்கின்றனர். அதன் தொடக்க விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் அது. நெட்டிசன்கள் செய்யும் குறும்புத்தனங்களால் திரை பிரபலங்கள் படாதபாடு படுவது என்பவோ உண்மைதான்.
picture:2