“ஃப்ரண்ட்ஸ் கூட என்ன ஏமாத்திட்டாங்க’!!”அதனால் நான் பைத்தியமுன்னு பேர் வாங்கிட்டேன்”!! வருத்தத்துடன் தன்னுடைய ஆதங்கத்தை பேசிய ஸ்ரீநிதி!!

வெளியிட்டது

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சர்ச்சைகளுக்கு பேர் போனவராக இருந்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. தன்னுடைய அம்மாவுடன் பிரச்னையில் துவங்கி கடைசியாக தன் தோழி நக்ஷத்ரா சித்ரவதை செய்வதாக கூறும் வரை அனைத்துமே பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. குறிப்பாக நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டார், “எப்படியாவது என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்” என பேசியதெல்லாம் சிம்பு ரசிகர்களை தாண்டி அனைவருக்குமே கொஞ்சம் மனக்கசப்பை கொடுத்தது. எதற்காக இவர் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார் என யாருக்கும் தெரியாத சூழ்நிலை இருந்தது.

"ஃப்ரண்ட்ஸ் கூட என்ன ஏமாத்திட்டாங்க'!!"அதனால் நான் பைத்தியமுன்னு பேர் வாங்கிட்டேன்"!! வருத்தத்துடன் தன்னுடைய ஆதங்கத்தை பேசிய ஸ்ரீநிதி!! 1

சின்னத்திரை பிரபல தொடரான “யாரடி நீ மோகினி” தொடரில் ஹீரோவின் தங்கையாக துணை நடிகையாக நடிக்க துவங்கியவர் நடிகர் ஸ்ரீநிதி. அந்த தொடரில் நடித்த மற்ற முக்கிய நாயகிகளாக நக்ஷத்ரா மற்றும் சைத்ரா ரெட்டி என இவர்கள் மூவருக்கும் இந்த தொடரின் மூலம் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நக்ஷத்ரா இந்த தொடர் முடிந்தவுடன் இப்பொது வேறொரு சேனலில் ஒளிபரப்பாகும் “வள்ளி திருமணம்” தொடரில் நடிக்க சென்று விட்டார். அதே போல அண்மையில் திருமண ஆனா நடிகை சைத்ராவும் நடுவில் அஜித் குமாருடன் ” வலிமை” படத்தில் நடித்திருந்தார். படம் வெளியான போது, படம் பார்த்து விட்டு ஸ்ரீநிதி பேசிய பேச்சு அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பின்னர் அதற்கு அழுது கொண்டே இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கோரினார். சைத்ரா இப்போது “கயல்” என்னும் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதிக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைத்த சில சின்ன சின்ன கதாபத்திரங்களில் பல தொடர்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். இன்ஸ்டகிராமிலும் இவருக்கு நல்ல ஃபலோவ்ர்ஸ் உண்டு. அவ்வப்போது போட்டோக்களும், விடீயோக்களும் வெளியிட்டு வந்தார். திடீரென இவருடைய அம்மா ஒரு நாள் இவரை திட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அது முதலே நடிகை ஸ்ரீநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன.

ஒரு நாள் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் எனவும், அவரின் வீட்டின் முன் அலப்பறை செய்து வீடியோ வெளியிட்டார். சிறுது நாட்களிலேயே இவருடைய அம்மா மீண்டும் இவரை திட்டும் வீடியோ வெளியானது. பின்னர் சிம்பு பிரச்சனை, நடுவில் கடந்த ஆண்டு மரணமடைந்த நடிகை சித்ராவை குறிப்பிட்டு தன்னுடைய தோழி நக்ஷத்திரவும் இது போல் ஆகி விட வாய்ப்புகள் உண்டு, அவரும் சிக்கலில் உள்ளார் என பல்வேறான விடியோக்களை வெளியிட்டு வந்தார்.

பலரும் இவரை மெண்டல் என கூறும் போதும் கூட, சிலர் இவருக்கு என்ன ஆயிற்று எதனால் எப்படி செய்து வருகிறார் என யாருக்கும் தெரியாத நிலையில் இப்போது இவரே ஒரு தனியார் பேட்டிக்கு அந்த விஷயங்களுக்கு மனம் வருந்தி விஷயங்கள் பலவற்றை பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் தனுக்கும் சண்டிகர் சிம்புவிற்குமான பிரச்சனை, நண்பர்கள் செய்த துரோகம், தன்னுடைய தாயாரை தான் பிரிந்து படும் கடினம் என பல்வேறு விஷயங்களுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Video Courtesy – CineUlagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்