ஆட்சி மாற்றத்தின் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதில் இலங்கை துணை உயர் ஆணையர் டி வெங்கடேஷ்வரன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை ஈர்க்க நான் தென் மாநிலங்களுக்குச் செல்வேன். அடுத்த மாதம் ஒரு முதலீட்டாளர் மன்றமும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று கடந்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மகிந்த ராஜபக்சவிடம் இருந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற பிறகு வெங்கடேஸ்வரன் கூறினார்.
வெங்கடேஷ்வரன் இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை நெல் சாகுபடி பருவத்திற்காக வழங்குவதில் மத்திய அரசின் உதவியைப் பாராட்டினார், இது இலங்கைக்கு கடினமான காலம், இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் என்னுடைய முழு உழைப்பை போடுவேன் எனவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டாலர் உதவி கிடைத்து, கூடுதல் உதவிக்காக தேடும் நிலையில், அது இன்னும் 1 பில்லியன் டாலர்களாக இருக்கலாம், வெங்கடேஷ்வரன், மற்ற நாடுகளின் உதவியயை மட்டும் சார்ந்து இருக்க இலங்கை விரும்பவில்லை என்று கூறுகிறார். தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் இருந்து முதலீட்டை எதிர்பார்க்கிறோம், என்றார்.
தனது நாட்டிற்கு முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவின் உதவியை நாடிய அவர், வர்த்தக அறைகள் மற்றும் மருந்து நிறுவனங்களுடன் இரண்டாவது சுற்று முதலீடு செய்ய மத்திய அரசு பேச வேண்டும் என்றார். “இவை புதிய முதலீடுகள் அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முதலீடுகளாக இருக்கலாம். அவர்கள் இங்கு உற்பத்தியைத் தொடங்கி எஞ்சியதை இலங்கையில் முடிக்கலாம்,” என்றார். “ஒரு குறிப்பிட்ட பகுதியில் முதலீடு செய்யும்படி நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலும் முதலீடு செய்யலாம்,” என்றார்.