Categories: சினிமா

“முதல்வரையும் ஆச்சரியப்படுத்திய இரவின் நிழல்”!!”பார்த்திபனை புகழ்ந்து ட்விட்டரில் பதிவு”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

"முதல்வரையும் ஆச்சரியப்படுத்திய இரவின் நிழல்"!!"பார்த்திபனை புகழ்ந்து ட்விட்டரில் பதிவு"!! 1

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் இப்பொது தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் படத்தை இயக்குனர் நடிகர் பார்த்திபனுடன் பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “எதிலும் தனிப்பணி அதுவே பார்த்திபன், ஒத்த செருப்புக்கு பின் ஒத்த ஷாட் படம். படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!!” என எழுதி அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

உலகளவில் எடுக்கப்பட்டுள்ள முதல் non -linear single shot film என்ற பெருமையுடன் மிக பெரிய உழைப்பை கொட்டி, 93 நிமிடங்கள் திரையில் மிக பெரிய மேஜிக் செய்துள்ளார் பார்த்திபன் என்றே மக்களும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்