தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது வரை அதற்கு இவர் காரணம் இல்லை, அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் தான் காரணம் என கூறி வருகிறார்.

மேலும் சில காலமாக பேட்டியளிக்காமல் இருந்த சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டியில் மிகப்பெரிய பிரபலங்கள் பெயர்களை இழுத்து அவர்கள் வீட்டு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறி இருந்தார். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் ஓரினசேர்கையாளர் என்றும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் சுசித்ரா. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
தற்போது இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல தொகுப்பாளினி முன்னணி நடிகர் உடன் தொடர்பில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.தற்போது யார் அந்த தொகுப்பாளினி யார் அந்த நடிகர்ன்னு ரசிகர்கள் தங்களது தேடுதலை ஆரம்பிச்சி இருக்காங்க.