சூப்பர் ஸ்டார் உடன் கைகோர்க்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்?

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் முடிவடைந்து விட்டதாகவும் டப்பிங்கும் செய்து முடித்துவிட்டுத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் பின்னர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ பட இயக்குனர் தேசிங் ராஜா ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இயக்குனர் ஹை பட்ஜெட் படமாக எடுக்க

சூப்பர் ஸ்டார் உடன் கைகோர்க்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்? 1

நினைத்தார். ஆனால் ரஜினி பட்ஜெட் அதிகமான படத்தில் நடிக்க வேண்டுமா என்ற எண்ணுகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. தற்போது ரஜினிகாந்த தனது முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற இயக்குனர் ” பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக இணையதளத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் படம் ‘பசங்க’. இது மூன்று தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர். தற்போது சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி வருகிறார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்