
சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு ஆகியோர் இனைந்து நடிக்கும் படம், சூரரைப்போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விவேக் எழுதிய ‘வெய்யோன்சில்லி’ என்ற பாடல், நடுவானில் விமானத்தில் பறந்த வண்ணம் வெளியிடப்பட்டது. இதுகுறித்து சூர்யா கூறுகையில், விமானத்துறையில் சாதனை படைத்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு நடிப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இந்த படத்தில் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் படமாக்கப்பட்டது. எனவே, முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் 70 அரசு பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து.
கடல் மீது விமானம் பறந்தபோது ஒரு பாடலை வெளியிட்டோம். இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.