தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்து இருக்கும் ஜோடிகள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருதுகள் பெற்று இருந்தனர். 2020ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த திரைப்பட விருதை சூரரைப் போற்று படம் பெற்று இருந்தது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது கீழிருந்த ஜோதிகா, தனது மொபைல் போனில் சூர்யாவை படம் பிடித்தார்.

அதேபோல் தயாரிப்பு நிறுவனமான 2d என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவிற்கு விருது வழங்கப்பட்ட போது, கீழே அமர்ந்திருந்த சூர்யா அதை தனது மொபைலில் ஜோவை போட்டோ எடுத்திருந்தார். இது போன்ற பல கேண்டிட் புகைப்படங்கள் கிடைத்திருந்தன. அந்த அழகான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. மேலும் தேசிய விருது மெடலை தனது மகன் மற்றும் மகள் இருவரின் கழுத்திலும் போட்டு அழகான புகைப்படத்தை எடுத்து இருந்தனர். பிறகு தனது தந்தை சிவக்குமார் தனது தாயார் உடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது சூர்யா பதிவிட்டு இருந்தார்.
மதான் படங்களுக்கு சரியான கதையை தேர்வு செய்ய முடியாமல் கஷ்டப்படும் பொழுதெல்லாம் ஜோதான் தனக்கு உதவியாக இருந்து கதைகளை கேட்டு அந்த படங்களை தேர்வு செய்தார். என்னுடைய வெற்றிக்கு ஜோவும் ஒரு பெரிய காரணம் என்று தனது மனைவி பற்றி பெருமையாக இருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விருது வாங்குவதற்கு முன்பு ஜோதிகாவை காத்திருந்து அழைத்து செல்லும் சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..