விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தற்போது மேகனாவின் கதையை இயக்குனர் முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவே தெரிகிறது. ரவுடிகள் சிலர் மேகனாவை கத்தியால் குத்தி விட அந்த பழி, தற்போது சரஸ்வதி தலையில் விழுகிறது. சரஸ்வதி தான் மேகனாவை குத்தி கொலை செய்துவிட்டார் என்று பலரும் சரஸ்வதி மீது பழியை தூக்கி போடுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் தொழிலதிபராக இருக்கும் மேகனா, தமிழ் மீது காதல் வயப்படுகிறார். பின்னர் அவருக்கு தமிழ் திருமணமானவர் என்கிற உண்மை தெரிய வருகிறது. ஆனால் தமிழ் தன்னை வேண்டும் என்றே ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் தமிழின் எதிரியான அர்ஜுனுடன் இணைந்து அவர் சதித் திட்டங்களில் ஈடுபடுகிறார் தற்போது அவருக்கு தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்கிற உண்மை தெரிய வருகிறது. அதனால் மேகனாவின் மாமா மேகனாவை கொலை செய்வதற்காக ரவுடிகளை அனுப்புகிறார். ரவுடிகள் மேகனாவை துரத்திக் கொண்டு சென்ற நிலையில் கத்தியால் அவரைக் குத்துகின்றனர்.
மேகனா உயிருக்கு போராடும் நிலையில் இப்போது அங்கு வரும் சரஸ்வதி மேகனாவின் வயிற்றில் இருந்து கத்தியை பிடுங்கிப் போடுகிறார். ஆனால் சரஸ்வதி கையில் கத்தி இருந்ததை பார்த்த மேகனாவின் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆட்கள், சரஸ்வதி தான் மேகனாவை கொலை செய்துவிட்டார் என்று அவர் மீது பழியை தூக்கி போடுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television