விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அபி கலெக்டராக இருக்கும் மாவட்டத்தில் தொடர்ந்து சிலை கடத்தல் தொழில் நடக்கிறது. இதன் அடுத்த பகுதியாக சிலை கடத்தலை கண்டுபிடித்த கோவில் அர்ச்சகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் அபிக்கு அடுத்த தலைவலி ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் இப்போது என்ன ஜெயிலர் கதையை எடுக்கிறீர்களா? என்று காமெடியாக கலாய்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வெற்றிடம் அர்ச்சகர் ஒருவர் வந்து கோவிலில் இருக்கும் உற்சவர் சிலையை யாரோ மாற்றி வைத்து விட்டதாக வெற்றியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர் கோவிலுக்கு வரும் ரவுடி கும்பல் சிலையை மாற்றி வைத்தது விஷயம் உனக்குத் தெரியும் என்று சொல்லி அர்ச்சகரை கொலை செய்து விடுகின்றனர். இதனால் மாவட்டத்தின் கலெக்டராக இருக்கும் அபிக்கு அடுத்தடுத்து பிரச்சினை ஏற்படுகிறது. வெற்றி தற்போது அபியிடம் சிலை கடத்தல் கும்பல் குறித்து கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை காதில் வாங்காமல் வெற்றியை அசிங்கப்படுத்திவிட்டு அபி சென்று விடுகிறார்.
இது உனக்கு சம்பந்தமில்லாத விஷயம் இதில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டு அபி சென்று விடுகிறார். அப்போது கபிலன் வெற்றியை சொடக்கு போட்டு வெளியில் செல்லுமாறு மிரட்டல் தொணியில் சொல்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இயக்குனர் நேற்றிரவு ஜெயிலர் படம் பார்த்திருப்பார் போல என்று சொல்லி காமெடியாக கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோ வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television