தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தது கவுண்டமணி செந்தில் தான். அந்த இடத்தை யாராலுமே நிரப்ப முடியாது என்று கூறிக்கொண்டிருந்த நிலையில், தன்னுடைய உடல் மொழியாலும் , முக பாவனைகளாலும், பல கோடி ரசிகர்களை கவர்ந்திழுந்த காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு.

என் தங்கை கல்யாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு ஏராளமான படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார்.சமீப காலமாக இவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் , இவர் ஏற்கனவே நடித்துள்ள ஏராளமான கதாபாத்திரங்களுக்கு மீம்களின் மூலம் உயிர்கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இவர் இறுதியாக 2017 ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் தளபதியோடு நடித்திருந்தார்.
அதன் பிறகு ஆள் அட்ரஸே இல்லாமல் படங்கள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு. இவருக்கா இந்த நிலைமை கூடிய சீக்கிரமே இவர் படங்களில் நடிக்கவேண்டும் என்று ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. கூடிய விரைவில் இவர் படங்களில் நடித்து அனைவரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்நிலையில் தற்போது வடிவேலு தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட செலஃபீ புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து வைகைபுயலை பார்க்கும் சந்தோஷத்தில் வடிவேலு ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.