நான் Arrogant தான், ஈகோ பிடிச்சவதான்.. வனிதா வெளியிட்ட முதல் போஸ்ட் | Vanitha Vijayakumar

வெளியிட்டது

வனிதா விஜயகுமார் இந்த பெயர் இணையதள வாசிகள் மத்தியில் மிக பிரபலம். இந்த பெயரை கடக்காமல் நாம் சமூக வலைத்தளங்களை கடக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான் வனிதா. இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். மூன்று திருமண வாழ்க்கை கசந்த நிலையில் அனைவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நான் Arrogant தான், ஈகோ பிடிச்சவதான்.. வனிதா வெளியிட்ட முதல் போஸ்ட் | Vanitha Vijayakumar 1

 

இவர் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த 3 வாரங்களாக சண்டை போட்டு கொண்டே வந்தார். நிகழ்ச்சியிலிருந்து விலகும் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிக்பாஸ்ஸிடம் சென்று நான் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி அழுதார். இந்த நிலையில் அவருக்கு மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

 

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய பின் வனிதா முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். நீங்கள் என்னை பற்றி திமிர் பிடித்தவள், attitude என்று நினைத்தால் அது உங்கள் பிரச்சினை, என் பிரச்சினை அல்ல என்றும். நான் உங்களை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன் என்றும், என் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்