நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா இந்த தம்பதியின் மூத்த மகள்தான் வனிதா. இந்த பெயரை கடக்காமல் நாம் சமூக வலைத்தளங்களை கடக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு இவரது குடும்பத்தாருக்கும் இடையில் சண்டை என்பதும், இவருடைய தந்தை விஜயகுமார் தொடங்கி, தங்கைகள் கூட இவரிடம் பேசுவது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு சண்டைக்கு பஎயர் போனவராக மாறிப்போனார். பின்னர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அல்டிமேட்டிலிருந்து அதிரடியாக விலகிவிட்டார். விலகலுக்குப்பின் அவர் தனது ஆடை தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். பேஷன் டிசைனரான வனிதா ஆடைகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவர் பிக்பாஸில் இருந்த போது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகாவும், வனிதாவின் உறவினரும் அந்த கடையை நடந்தி வந்தனர். Embed credits: Vanitha Vijayakumar
தற்போது வனிதா தனது வாழ்வின் அடுத்தக்கட்டமாக மேக்கப் மற்றும் பேஷன் ஸ்டியோ ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது குறித்து அவர் நெகிழ்ச்சியாக பேசினார். இந்த கடை திறப்பு நிகழ்ச்சிக்கு ஷகிலா, உமா ரியாஸ், சினேகன், கனிகா, நடிகை சங்கீதா, சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற இன்னும் பலர் கலந்து கொண்டுள்ளனர். தனி ஒரு பெண்ணாக இருந்து இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு வனிதா சென்றுள்ளார் இவர் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்தியுள்ளனர். நாமும் அவருடன் இணைந்து வனிதாவை வாழ்த்துவோம்..Watch the Video Below..