தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிட்டேன்.! ரொம்ப கஷ்டமா இருக்கு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு .!

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனா சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக இந்த செய்து இணையத்தில் தீயாக பரவி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தி தர்ஷனா நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தமிழும் சரஸ்வதியும் தொடரில் லீட் ரோலில் சரஸ்வதியாக நடிக்கும் நட்சத்திராவை விட ரசிகர்கள் அதிகமாக இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்று சொன்னால் அது வசுந்தரா கதாபாத்திரம் தான்.புகுந்த வீட்டிற்க்காக தனது தாயை கூட எதிர்த்து நிற்பதும், மூத்த மருமகளை தனது சொந்த அக்கா போல பாவிப்பதும், கெட்ட விஷயங்களுக்கு துணை போகாமல் நல்ல விஷயங்களுக்கு ஆதரவாக இருப்பதும் என்று வசுந்தரா கதாபாத்திரம் மக்களின் மனதை கொள்ளை கொண்ட அழகிய கதாபாத்திரமாக வடிவமைக்க பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனா விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிட்டேன்.! ரொம்ப கஷ்டமா இருக்கு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு .! 1

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. வசுந்தரா என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர், எப்போதும் என் இதயத்தில் இருப்பார். வசுந்தராவாக நான் செலவழித்த நேரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் என் மீது இவ்வளவு அன்பைக் கொட்டியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணத்தின் மூலம் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டேன், தனிப்பட்ட முறையில் நான் வளர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன், அதற்கு நன்றி. இந்த முழுப் பயணத்தையும் வண்ணமயமாகவும் வேடிக்கையாகவும் மாற்றிய அத்தகைய அற்புதமான நடிகர்களுடன் பணிபுரிந்ததை நான் பெருமையாகவும் ஆசீர்வதித்ததாகவும் உணர்கிறேன். நான் சம்பாதித்த நிபந்தனையற்ற அன்பு, ஆதரவு மற்றும் நட்சத்திர அந்தஸ்துக்கும் தமிழும் சரஸ்வதியும் வசுந்தராவும் மட்டுமே காரணம். அது என்றும் மறக்கப்படாது.


தினமும் என்னை ராணியாக உணர வைத்த ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. எனக்கு அற்புதமான நினைவுகளை வழங்கிய எனது தமிழும் சரஸ்வதியும் குழுவிற்கு நன்றி. இவ்வளவு திறமையான குழுவுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம். என் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தைகள் போதுமானதாக இருக்காது, ஆனால் நான் உங்கள் அனைவரையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். நான் சீரியலில் இருந்து விலக இருக்கும் செய்தி வெளியானதில் இருந்து நிறைய அன்பை கொட்டி தீர்க்கிறீர்கள், இதனால் நான் அன்பை மிகுதியாக உணர்கிறேன். இந்த குட்பையில் நீங்கள் அனைவரும் நல்லதைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும். அன்புடன் தர்ஷனா” என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே பலரும் சீரியலை விட்டு போக வேண்டாம் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்