Categories: சினிமா

நடுக்கடலில் விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி.! தற்போது எப்படி இருக்கிறார்? வெளியான பரபரப்பு அறிக்கை.!

வெளியிட்டது

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த பயங்கர விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இயக்குனர் சுசிந்திரன் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறி இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. இங்கு ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடலில் பயன்படுத்தப்படும் ஸ்கை ஜெட் ஒன்றோடு ஒன்று மோதி விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்றும், நீச்சல் தெரியாததால் அவர் கீழே விழுந்து அவருடைய முகங்கள் எல்லாம் சேதம் ஆகிவிட்டது என்றும் தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தன. மேலும் அவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி.! தற்போது எப்படி இருக்கிறார்? வெளியான பரபரப்பு அறிக்கை.! 1
ஸ்கூட்டர் போட் ஓட்டும் காட்சிகள் எடுக்கும் பொழுது நடந்த விபத்தினால் அவர் தண்ணீரில் மூழ்கிதாகவும் அதற்கு நீச்சல் தெரியாததால் துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் காப்பாற்றியதாகவும் தகவல் வெளியானது. மேலும் முகத்தில் ஏற்பட்ட காயங்களால் பற்கள் உடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாகவும் வதந்திகள் கொடி கட்டிப் பரவத் தொடங்கின. இது போன்று பல தகவல்கள் உலா வந்த நிலையில் மருத்துவமனையோ அல்லது விஜய் ஆண்டனி தரப்போ எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் விரைவில் ரசிகர்கள் அனைவரிடமும் வீடியோ கால் மூலமாக பேசுவார் என்றும் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் விஜய் ஆண்டனி பற்றிய தவறான பதவிகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாகவும் சுசீந்திரன் தனது கைப்பட எழுதிய கடிதத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த வந்த வள்ளி மயில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி அருண் விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பின்னர் அவர் மழை பிடிக்காத மனிதன், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். விரைவில் விஜய் ஆண்டனி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..! Watch the Below Video..!

 

YouTube Video Code Embed Credits: Jaya Plus

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்