Categories: அரசியல்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களை நாளை காலைக்குள் பணியில் திரும்ப சேர வேண்டும் – விஜயபாஸ்கர் உத்தரவு!!

வெளியிட்டது
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களை நாளை காலைக்குள் பணியில் திரும்ப சேர வேண்டும் - விஜயபாஸ்கர் உத்தரவு!! 1

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணியில் திரும்ப சேர வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களுக்கு இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்.

புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள். விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர்.
மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடம் இல்லை. பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். என்று அவர் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்