நீ வாயை மூடு டா முதல்ல, உன்ன எவன் டா கூப்பிட்டான்? செய்தியாளரை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி.!

வெளியிட்டது

நடிகை விஜயலட்சுமி இன்று காலை சீமானை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது பேட்டியில் ஒருவர் குதர்க்கமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அந்த செய்தியாளரை பார்த்து அவர் ஒருமையில் பேசிவிட்டு செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ வாயை மூடு டா முதல்ல, உன்ன எவன் டா கூப்பிட்டான்? செய்தியாளரை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி.! 1

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டார் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் எத்தனையோ முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திமுக கண்டிப்பாக இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லி விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவருடன் தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி உடன் இருந்தார்.

அப்போது செய்தியாளர்கள் ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து பேசவில்லை? சீமான் கயல்விழியை திருமணம் செய்து கொண்ட போது எங்கே போயிருந்தீர்கள்?/ என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த விஜயலக்ஷ்மி சீமான் கயல்விழி திருமணத்திற்கு முன்பே நான் அவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். மேலும் கயல்விழியை திருமணம் செய்து கொண்ட போது தன்னிடம் சமாதானம் பேசினார்கள்.

சீமான் தன்னிடம் உன்னை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்துக் கொள்வதாக பேசி இருந்தார். அதனால்தான் அவர் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விஜயலட்சுமி கூறினார். தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் சீமான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழுத்துப்பூர்வமாக எதுவும் எழுதிக் கொடுத்தாரா என்று கேள்வி எழுப்பினர்.

அப்போதே கோபமான விஜயலட்சுமி நான் மீடியா மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன் .நீங்கள் இதுபோல் கேள்விகள் கேட்கக்கூடாது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றுபவர்களிடம் எழுதி வாங்கினீர்களா? அவருடன் படுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது என்று கோபமானார். தொடர்ந்து இதே போல கேள்விகள் வந்ததால் ஆவேசமான அவர், ஒரு கட்டத்தில் பேட்டியிலிருந்து வெளியேறினார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அங்கு அழைத்து வந்த போது அதே செய்தியாளர் மேலும் ஒரு கேள்வியை கேட்க கடுப்பான விஜயலட்சுமி, “நீ வாயை மூடுடா, யார் உன்னை இங்கே கூப்பிட்டார்கள்” என்று சொல்லி ஒருமையில் திட்டி விட்டு கோபமாக வெளியேறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்