கோலி இல்லாத போது அறையில் புகுந்து வீடியோ எடுத்த நபர்.! செம்ம கடுப்பான விராட் கோலி.!

வெளியிட்டது

விராட் கோலியின் அறையின் உள்ளே புகுந்து அறையை வீடியோ எடுத்த ரசிகர் பற்றி காட்டமாக பதிவிட்டுள்ளார் விராட் கோலி. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளியுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் விராட் கோலி. இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். தற்போது டி 20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் அறையில் புகுந்த ரசிகர் ஒருவர் அந்த அறையை சுற்றி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

கோலி இல்லாத போது அறையில் புகுந்து வீடியோ எடுத்த நபர்.! செம்ம கடுப்பான விராட் கோலி.! 1

 

 

அந்த வீடியோ வைரலாக தொடங்கியது. விராட் கோலியின் ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை ஆர்வமாக பகிர்ந்து வந்தனர். ஆனால் பலரும் விராட் கோலியின் தனிப்பட்ட உரிமையை இது பாதிப்பதாக உள்ளதாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த வீடியோவை பார்த்த விராட்டும் அனுஷ்கா ஷர்மாவும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த கோலி கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.

 

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், அவர்களைச் சந்திப்பதில் உற்சாகமடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது. எனது சொந்த ஹோட்டல் அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான வெறித்தனம் மற்றும் தனியுரிமையின் முழுமையான ஆக்கிரமிப்புடன் நான் சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்