IPL வீரர்களில் யாரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி?

வெளியிட்டது

ஐபிஎல் போட்டிகள்  ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் ஏலம் நாளை அதாவது 19-12-2019ல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.கிரிக்கெட்  முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க போட்டா போட்டி நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கனவே கையிருப்பு தொகையாக சென்னை அணியில் 14.6 கோடி ரூபாயும், மும்பை அணியில் 13.5 கோடி ரூபாயும், சன் ரைசர்ஸ் அணியில் 17 கோடி ரூபாயும், பஞ்சாப் அணியில் 42 கோடி ரூபாயும், கொல்கத்தா அணியில் 35.6 கோடி ரூபாயும், பெங்களூர் அணியில் 7.9 கோடி ரூபாயும் ராஜஸ்தான் அணியில் 28.9 கோடியும், டெல்லி அணியில் 27.8 கோடி இருப்பு உள்ளது.

கிறிஸ்லின், மோர்கன், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகிய வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரர்களில் பரிந்தேர் ஸ்ரன், கேஎஸ் பரத், பெரியசாமி, உனாகட் மற்றும் ராபின் உத்தப்பா  ஆகியோருக்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்