
பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி முன்னேறினார்கள். அவர்கள் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் இணையான இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்ஜெயா சுகாமுல்ஜோ ஜோடியை எதிர்கொண்டனர். அதில் 18-21, 16-21 என்ற கணக்கில் இந்திய வீீீரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
பிரஞ்சு ஓபனில் வென்ற இந்தியாவின் கடைசி ஜோடி பார்தோ கங்குலி – விக்ரம் சிங் ஆவார். இவர்கள் 1983ம் ஆண்டில் பிரஞ்சு ஓபனில் வெற்றி பெற்றனர். சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் அவர்கள் தங்களின் முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.