Categories: கல்வி

ஐ. ஐ. டி – பம்பாய் மண்ணிலிருந்து வரும் பாக்டீரியா பூச்சிக்கொல்லியை நீக்குகிறது!

வெளியிட்டது
ஐ. ஐ. டி – பம்பாய் மண்ணிலிருந்து வரும் பாக்டீரியா பூச்சிக்கொல்லியை நீக்குகிறது! 1

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வளாகத்தின் மண்ணிலிருந்து ஒரு பாக்டீரியா விகாரத்தை அடையாளம் கண்டுள்ளனர். இது கார்பரில் பூச்சிக்கொல்லியில் இருந்து முழுமையாக தீர்வுகான உதவுகிறது.

விவசாயத்திற்கு கார்பரில் பூச்சிக்கொல்லி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்துமென்று கூறப்படுகிறது. மேலும் இது மண் மற்றும் நீர் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடுத்துகிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா விகாரம் தனது வளர்ச்சிக்கு பயன்படும் கார்பன் மற்றும் நைட்ரஜனை பூச்சிக்கொல்லியின் மூலம் பயன்படுத்துகிறது. பாக்டீரியா விகாரத்தின் இனங்கள் அடையாளம் காணப்படவில்லை, இருப்பினும் இது சூடோமோனாஸ் பேரினத்தின் கீழ் வருகிறது.

இது கார்பரில் மிக உயர்ந்த செறிவுடன் நடுத்தரத்தில் நன்றாக வளரும் தன்மை உடையது. ஆராய்ச்சியாளர்களால் பாக்டீரியாவின் மரபணுக்களை அடையாளம் காண முடிந்தது. மேலும் முழுமையான வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ள வளர்சிதை மாற்ற பாதையை அடையாளம் கண்டறிந்தனர்.

மரபணுவைப் பற்றிய ஒரு ஆய்வில் கார்பரில் சிதைவுக்கு சிறப்பு மரபணுக்கள் இருப்பதாகக் காட்டியது. அபாயகரமான சேர்மங்களை உடைக்கும் திறன் கொண்ட பிற தொடர்புடைய நுண்ணுயிரிகளிலிருந்து இந்த மரபணுக்களை பாக்டீரியம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்