டெல்லியை நோக்கி உத்தர பிரதேசம் மாநில விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி மாநில எல்லையில் ஆயிரம் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள கரும்பிற்கான தொகையை வழங்ககோரியும், இன்னும் பல கோரிக்கைகளுடன் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 17 ஆம் தேதி மேற்கு உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து பேரணியை தொடங்கிய விவசாயிகள் நேற்று (செப்.20) நொய்டாவை அடைந்தனர். அங்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரின் பிரதிநிதிகள், விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பயணளிக்கவில்லை என்பதால் பேரணி டெல்லியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து டெல்லி மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகள்: