பிரேசில் நாட்டில் ஏற்பட்ட அரிதான ‘நெருப்புச் சூறாவளி’!

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட அரிதான 'நெருப்புச் சூறாவளி'! 1

அரகாட்டுபாவின் பிரேசில் நகராட்சியில் ஏற்பட்டுள்ள அரிதான ‘நெருப்புச் சூறாவளியை’ அங்கிருந்த மக்கள் கேமராவில் படம் பிடித்தனர். இது அங்கிருந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்வு மத்திய மேற்கு பிரேசிலின் சாண்டா ஹெலினா டி கோயிஸுக்கு அருகிலுள்ள விளைநிலங்களில் ஏற்பட்டது. மேலும் நெருப்புச் சூறாவளி வெளியேறியபோது பண்ணை தொழிலாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட தீ மூலம் நிலங்களை அழித்துக் கொண்டிருந்தனர்.

விளம்பரம்

வானிலை மற்றும் காலநிலை நிலைமைகளின் காரணத்தினாலும் அப்பகுதியில் சுழற்காற்று வீசியதாலும் அதனுடன் பற்றி எரியும் நெருப்பும் சேர்ந்து நெருப்புச் சூறாவளியை வளர்த்தது, இது தீப்பிழம்புகளை வானத்தில் அனுப்பியது.

சாவ் பாலோவின் சோமர் வானிலை ஆய்வு நிறுவனத்தின் வானிலை ஆய்வு வல்லுநர்கள் இந்த நெருப்புச் சூறாவளி மிகவும் அரிதான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர்.

விளம்பரம்

இந்த நிகழ்வு மிகவும் குறிப்பிட்ட வளிமண்டல நிலைமைகளில் மட்டுமே நிகழும் மற்றும் அதிக வெப்பநிலை, கொந்தளிப்பான காற்று, குறைந்த காற்று ஈரப்பதம் மற்றும் வறண்ட மண்ணின் கலவையாகும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடையவை  பிரெக்ஸிட் மசோதா வெற்றி, வெளியேறுகிறது இங்கிலாந்து!

காற்றின் செங்குத்து சுழலும் நெடுவரிசையான இவ்வகையான சூறாவளி காற்று ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது மணிக்கு 161 கி. மீ வேகத்தில் காற்று வீசும் மற்றும் அரை மைல் உயரத்தில் காணப்படும் என்று கூறுகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment