தமிழகத்தில் இயங்கிவரும் ஹுண்டாய் தொழிற்சாலை 30 இலட்ச கார்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1999ஆம் ஆண்டு நேவாலுக்கு ஏற்றுமதியை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம் தற்போது சுமார் 28 நாடுகளுக்கு தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வருகின்றது.
2004ஆம் ஆண்டு ஹுண்டாய் நிறுவனத்தின் காா்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 1 இலட்சமாக உயர்ந்த நிலையில் 2010-இல் 10 இலட்சமாகவும், 2014-இல் 20 லட்சமாகவும் உயா்ந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த நிதியாண்டில் சுமார் 30 இலட்சம் கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.