
தமிழில் குறுக்கியகாலத்தில் மக்களிடம் வரவேற்பை பெற்று நடிகையாக இருப்பவர் நடிகை ரைசா வில்சன். மாடல் நடிகையாக இருந்த அவர், தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார். 100 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் 63ஆவது நாளில் வெளியேறினார்.

முதல் படமாக இவர் நடிகர் தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் காஜலின் அசிஸ்டண்டாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த மற்றொரு நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் “பியார் பிரேமா காதல்” படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றத்துடன் மிக பெரிய அளவில் நடிகை ரைசாவிற்கு கவனம் கொடுத்தது.

பின்னர் இயக்குனர் பாலாவின் “வர்மா” படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமல் போய், படத்தின் வேறொரு பாதிப்பு வெளியானது. இருப்பினும் இவர் அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “எஃப்.ஐ.ஆர்” படத்தில் போலீஸாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூகவலைத்தளங்களில் இவர்க்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட்கள் நடத்தி போட்டோக்களை வெளியீட்டு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கில் “தி சேஸ்” தமிழில் கருங்காப்பியம், காபி வித் காதல், பொய்க்கால் குதிரை, லவ், அலிஸ், காதலிக்க யாருமில்லை” என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு “midnight anxiety” என கூறப்படும் ஸ்ட்ரெஸ் குறித்து பதிவிட்டுள்ளார். இது நேற்று இரவு முதல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனை அவர் விளையாட்டாக கூறினாலும், அவர் உண்மையில் அவர் ஸ்ட்ரெஸ்ஸால் அவதிப்பட்டு வருகிறார் என ரசிகர்கள் பலரும் அவர்க்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
