சின்னத்திரையில் அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள்தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். ஆலியா மானசா ஆரம்பத்தில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார். பின்னர் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சஞ்சீவ் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நாடகத்தின் போது அவருக்கு சஞ்சீவி உடன் காதல் ஏற்பட்டது. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆல்யா மானசா. தற்போது இவர்கள் இருவரும் மிக சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த சந்தோசமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஐலா இவர் பார்ப்பதற்கே மிக அழகாக இருப்பார். இவர் செய்யும் குறும்புகளை தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி பார்வையாளர்களை அள்ளி விடுவது வழக்கம். மேலும் ஆல்யா ராஜா ராணி 2வில் நடித்துக் கொண்டிருந்தபோது, இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இரண்டாவதாக இவருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனால் சீரியலை விட்டு விலகி ஆல்யா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் உடல் எடை கூடியிருக்கும் ஆல்யாவிற்கு வாய்ப்புகள் வந்த போதும் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இதனால் விரைவில் உடலை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.

உடல் எடையை குறைக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். உடல் எடை குறைந்த பின்பு தன் கணவருடன் இணைந்து சன் டிவியில் ஒரு புதிய தொடரில் நடிக்க ஆல்யா ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் ஆல்யாவை அவரது கணவர் சஞ்சய் உடன் திரையில் பார்க்கலாம். அதற்காக ஆல்யா மிக கஷ்டப்பட்டு தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.. அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video…