தமிழகத்தில் நாகை, கடலூர் , தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை!!

தமிழகத்தில் நாகை, கடலூர் , தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை!! 1

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, கடலூர் , தேனி ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் வடகிழக்கு பருவமழை மிதமான அளவில் பெய்து வருகிறது தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி,ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது இதனிடையே இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

நேற்று இரவு சென்னையில் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் காலையில் இதமான வானிலை நிலவுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சீர்காழி , பூம்புகார் , வைத்தீஸ்வரன் கோயில் தரங்கம்பாடி மற்றும் கொள்ளிடத்தில் மலை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குளிர்ந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்கிறது. விருத்தாச்சலம்,திட்டக்குடி நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி , மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விளம்பரம்


தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment