பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஹவுஸ்மேட்ஸ்.! எல்லாரும் அழுறாங்க.! என்ன காரணம்னு தெரியுமா?

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இரண்டாவது வாரம் ஜிபி முத்து தானாக முன் வந்து வெளியேறிவிட, நடன இயக்குனர் சாந்தியை எலிமினேட் செய்து அனுப்பியுள்ளனர். தற்போது மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஹவுஸ்மேட்ஸ்.! எல்லாரும் அழுறாங்க.! என்ன காரணம்னு தெரியுமா? 1

விளம்பரம்

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் சகப் போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்துவது, ஒருமையில் பேசுவது என்று தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டு செல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அந்த டிவி இந்த டிவி என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த டீவியை சேர்ந்த மைனா மற்றும் கண் பார்வை தெரியாதவர்கள் போல நடனம் ஆடினர். அதை பார்த்த ஹவுஸ் மேட்ஸ் பலரும் கண்கலங்கினர்.

விளம்பரம்

Leave a Comment