மௌனராகம் சீரியலில் வருணுடன் ஹனிமூன் சென்றிருக்கும் சக்தியை கொலை செய்வதற்காக விஸ்வநாதன் ஒரு ரவுடியை அனுப்பி இருக்கிறார். அதை வருண் கண்டுபிடித்து விட்டார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் மௌன ராகம். இந்தத் தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்தத் தொடருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எதிரிகள் செய்யும் தீய செயல்களை உடனே கண்டுபிடித்து மர்மம் முடிச்சுகளை அவிழ்ப்பதால் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியலின் கதாநாயகி சக்தியும் அவருடைய கணவரும் ஹனிமூனுக்காக கோவா சென்று இருக்கிறார்கள். தற்போது அங்கும் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சக்தியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். அதில் இரண்டாவது மனைவி காதம்பரியின் தந்தை தான் விஸ்வநாதன். காதம்பரியும், விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டு சக்தியையும், அவரதௌ தாயையும் எப்படியாவது சக்தியின் தந்தையிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று பல தீய செயல்களை செய்து வருகின்றனர். அந்த வீட்டில் எந்த கெட்ட செயல்கள் நடந்தாலும் அதற்கு காரணம் காதம்பரியும், அவரது தந்தையும் தான் காரணமாக இருக்கும். சமீபத்தில் கூட மல்லிகாவை கடத்தி வைத்து நாடகமாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது சக்தியும் வருணும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களாக எங்குமே செல்ல முடியாமல் இருந்தனர். தொடர்ந்து பிரச்சினைகள் இருந்ததால் மூன்று முறை அவர்கள் பிளான் செய்தும் ஹனிமூன் செல்ல முடியாமல் இருந்தது.

தற்போது இருவரும் கோவாவிற்கு டூருக்கு சென்றிருக்கின்றனர். மூன்று நாள் பயணமாக அவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கும் காதம்பரியின் தந்தை விஸ்வநாதன் சக்தியை கொலை செய்வதற்காக ஆளை அனுப்பி இருக்கிறார். இதை பார்த்த வருண் அந்த ரவுடியை ஓடிப் பிடித்து கன்னத்தில் அறை விட்டு எதற்காக எங்களை பின் தொடர்கிறாய் என்று கேட்டதற்கு விஸ்வநாதன் தான் என்னை அனுப்பினார் என்று அந்த ரவுடி ஒப்புக்கொண்டான். அப்போது விஸ்வநாதன் சரியாக போன் செய்கிறார். இதனால் கையும் களவுமாக விஸ்வநாதன் மாட்டிக் கொள்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television