உலகம் எங்கிலும் உள்ள மக்கள் என்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சினேகா பிரசன்னாவும் காதலர் தினத்தை கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை பிரசன்னா தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் தனது மனைவி சினேகாவுக்கு அவர் உருக்கமாக கவிதை ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா. இவர்கள் இருவருமே எவ்வளவு வயதானாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருந்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சாக்லேட் பாயாக இருந்த அவர் பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். சீனா தானா, சாதுமிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், கோவா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, சினேகாவிற்கும் பிரசன்னாவிற்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தங்கள் காதலிப்பதை வெளியில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அவர் பெயர் விஹான். பின்னர் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு ஆதிந்தியா என்று பெயர் சூட்டி இருந்தார்கள்.

சமீபத்தில் தனது மகள் ஆதிந்தியாவின் பிறந்த நாளுக்கு அவரை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கேக் வெட்டியும், அந்த குழந்தைகளுக்கு உடைகள் உணவுகள் அளித்தும் பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் சினேகா. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தனது பிள்ளைகளை சினேகா நன்றாக வளர்த்து வருகிறார் என்று பலரும் சினேகாவை வாழ்த்தியிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா பிரசன்னா தம்பதிகள் ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அழகிய புகைப்படங்களை வெளியிட்டு சினேகாவிற்காக உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார் பிரசன்னா.

அதில் அவள் என்னுடைய பெண் மட்டுமல்ல, என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என்னுடைய உயிர் மற்றும் அனைத்தும் அவள் தான். இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் என்று கூறி அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சினேகா பிரசன்னா தம்பதிகளுக்கு அவர்களது ரசிர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.