மிர்ச்சி செந்திலுக்கும் ஸ்ரீஜாவுக்கும் பிறந்த மகனின் புகைப்படங்களை தற்போது அவர்கள் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். மேலும் தனது மகனுக்கு பெயர் சூட்டு விழாவையும் நடத்தி அந்த வீடியோவையும் அவர்கள் இணையத்தில் பதிவேற்றி இருக்கின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகன் பிறந்துள்ளதால் மிகுந்த குஷியில் இருக்கும் செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள் தற்போது தனது மகனின் முகத்தை முதன்முறையாக காட்டி இருக்கின்றனர்.

கேரளாவில் வைத்து மகனுக்கு மிகவும் பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழாவையும் செந்தில் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் செந்தில்.

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடிகராக உருவெடுத்தவர் நடிகர் செந்தில். ரேடியோ ஜாக்கி ஆக இருந்தபோதே தனது எதார்த்தமான பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்த இவர், பின்னர் “மதுர” என்கிற சீரியலின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்கிற சீரியலில் சில நாட்கள் மட்டுமே நடித்தார்..

பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். 2011-ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய இந்த தொடர் 2013 வரை சுமார் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது.

இந்த தொடரில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் செந்திலும் மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ரீஜாவும் நடித்தனர்.

இந்த சீரியலில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒத்துப் போனதால் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறிப் போயினர். ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீஜாவை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் செந்தில்.

திருமணத்திற்கு பின்னர் செந்தில் ஸ்ரீஜாவும் இணைந்து சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல நாடகங்களில் நடித்திருந்தார் செந்தில்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் அண்ணா என்கிற சீரியலின் நடித்து வருகிறார். 4 தங்கைகளுக்கு அண்ணனாக இருக்கும் கதாபாத்திரத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இது மட்டும் அல்லாமல் தவமாய் தவமிருந்து, எவனோ ஒருவன், சென்னை 28, கண் பேசும் வார்த்தைகள், பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவன் டா நீ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் செந்தில். ஆனால் வெள்ளித்திரை இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்து இருந்தார். மேலும் ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார் செந்தில். அந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறியிருந்த அவர், முதல் முறையாக தனது மகனின் முகத்தை காட்டி தற்போது புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மேலும் தனது மகனுக்கு கேரளாவில் வைத்து பெயர் சூட்டு விழாவையும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டில் வைத்து பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டிருக்கிறது. தனது மகனுக்கு ஸ்ரீ வல்லப தேவ் என்று அழகான தமிழ் பெயரை சூட்டி இருக்கிறார் செந்தில்.

செந்தில் – ஸ்ரீஜா தங்கள் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Senthil Sreeja Originals