வடிவேலுவுக்கு இதை செய்தே ஆக வேண்டும்.! மிகப்பெரிய கோரிக்கை வைத்த விக்னேஷ் சிவன்.!

மாமன்னன் திரைப்படத்தில் நடித்த வடிவேலுவிற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறார். அவர் அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவாக போட்டிருக்கிறார். தமிழ் திரையஉலகில் வடிவேலு ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் உடன் இணைந்து காமெடி செய்து வந்த வடிவேலு பின்னர் தனியாக காமெடி ட்ராக்கில் களமிறங்கினார். அன்று தொடங்கி 2011 ஆம் ஆண்டு வரை வெற்றி நாயகனாக வலம் வந்த அவர், பின்னர் அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். ஆனால் அவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாரோ அந்தக் கட்சி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் திரை வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து போன வடிவேலுவிற்கு தற்போது மீண்டும் திருப்புமுனையாக அமைந்திருக்கும் ஒரு படம் என்று சொன்னால் அது மாமன்னன் தான். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னாக நடித்து தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார் வடிவேலு.

தொடர்புடையவை  அப்பாவுக்கே டஃப் கொடுத்த மகள்.! மகள் நடனம் ஆடுவதை ரசித்து பார்த்த தளபதி விஜய்.!

வடிவேலுவுக்கு இதை செய்தே ஆக வேண்டும்.! மிகப்பெரிய கோரிக்கை வைத்த விக்னேஷ் சிவன்.! 1

விளம்பரம்

அதிகாரம் படைத்த எம்எல்ஏவாக இருந்த போதிலும் சாதி கட்டுப்பாடு காரணமாக அதிகாரத்தை செயல்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு எம்எல்ஏவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ,தற்போது தமிழக மக்கள் மனங்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் வடிவேலு. பல வருடங்களாக நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு இந்த படத்தில் நம்மை கண்கலங்க வைத்திருக்கிறார். மேலும் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் என பல முன்னணி நடிகர்களும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசிலின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். மேலும் மாரி செல்வராஜின் திறமையான இயக்கத்தையும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டு இருக்கிறார்.

வடிவேலுவுக்கு இதை செய்தே ஆக வேண்டும்.! மிகப்பெரிய கோரிக்கை வைத்த விக்னேஷ் சிவன்.! 3

விளம்பரம்

அதில் அவர், “மாரி செல்வராஜின் கலைப் பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும். முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும், அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும், தனது அபார நடிப்பால் திரையில்
முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.! உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது.

தொடர்புடையவை  நடிகர் தாமு மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ப்ளூ சட்டை மாறன் போர்க்கொடி.!

வடிவேலுவுக்கு இதை செய்தே ஆக வேண்டும்.! மிகப்பெரிய கோரிக்கை வைத்த விக்னேஷ் சிவன்.! 5

விளம்பரம்

தமிழரின் பெருமையை தன் இசையின் மூலம் உலகறியச் செய்த ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தில் தமிழ் உணர்வுகளுக்கு உலகத்தரமான இசையை வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதெல்லாம் இசைப்புயலுக்கு மட்டுமே சாத்தியம். சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஃபாசிலுக்கு இது இன்னொரு மைல்கல். திரையில் அவரை பார்க்கும் போதெல்லாம் வெறுப்புணர்வு ஏற்படுவதே அவர் நடிப்புக்கு சான்று.மேலும் கீர்த்தி சுரேஷ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தேனி ஈஸ்வர் என ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி இந்த மாமன்னனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்! என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment