விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பாக்யா செல்வி மற்றும் பழனிச்சாமியிடம் அழுது புலம்பி கொண்டிருக்கிறார் தான் இந்த இடத்திற்கு வருவதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டேன் ஆனால் நீங்கள் எல்லாம் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டீர்களே என்று சொல்லி பாக்யா தற்போது மனமுடைந்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது குடும்பத் தலைவியாக இருந்து பின்னர் ஈஸ்வரி மசாலா, ஐடி கம்பெனி கேன்டீன் காண்ட்ராக்ட், திருமண ஆர்டர்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, கல்லூரி என ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் கொண்டிருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தையும் திறம்பட நடத்தி வரும் பாக்யாவிற்கு தற்போது சில சறுக்கல்கள் ஏற்படுட்டு இருக்கிறது. ஐடி கம்பெனியின் கேண்டீன் காண்ட்ராக்டை செல்வியை நம்பி ஒப்படைத்திருக்கிறார் பாக்யா. ஆனால் செல்வி அங்கு சில தவறுகளை செய்கிறார். உணவில் உப்பு போட மறந்து விட்டார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்யா செல்வியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இது என்னுடைய தொழில் மட்டும் கிடையாது, என்னை மோசமாக நடத்தியவர்கள் முன்னால் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக இருந்தது இந்த கேண்டீன் தான். இதில் நாம் தோற்றுப் போனால் நம்மை போல் முன்னுக்கு வர நினைக்கும் பெண்கள் அனைவரையும் இப்படித்தான் சொதப்புவீர்கள் என்று இந்த சமூகம் நினைத்து விடுவார்கள்.

நம்மை கீழே தள்ள பார்ப்பார்கள், அதற்கு நாமே இடம் கொடுக்கக் கூடாது. அவர்கள் முன்னிலையில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும் என்று செல்வியை பார்த்து கோபமாக கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television