எதிர்நீச்சல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் ஜீவானந்தமின் மகள் வெண்பா ஈஸ்வரியிடம் சென்று நீங்கள் பார்ப்பதற்கு என் அம்மா போலவே இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதை கேட்ட ஈஸ்வரி கண்கலங்கி மனமுடைந்து அழுகிறார். அதைப் பார்த்த ஜீவானந்தமும் மன நெகிழ்ச்சியில் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஜீவானந்தத்தை கொலை செய்வதற்கு குணசேகரன் ஆட்களை அனுப்பிய நிலையில், தவறுதலாக ஜீவானந்தத்தின் மனைவி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கும் ஜீவானந்தத்தை குணசேகரன் வீட்டு மருமகள் அனைவரும் சென்று பார்ப்பதற்காக சென்று இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் ஜீவானந்தத்தின் மகள் நெருக்கமாக பேசுவதும் நெகிழ்ச்சியாக பேசுவதும் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் சண்டை முற்றுகிறது. என் பேச்சை மீறி இவள் வெளியே சென்றால் இவள் உனக்கு மகள் கிடையாது என்று விசாலாட்சியை குணசேகரன் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு புறம் ஜீவானந்தம் வீட்டில் இருக்கும் ஈஸ்வரியை பார்த்து ஜீவானந்தத்தின் மகள் வெண்பா உங்களை பார்ப்பதற்கு என் அம்மா போலவே இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV